Month: May 2022
க.சிவசங்கர் ஒரு தொழிலாளி தன் இளமைக் காலம் முழுவதும் செலுத்திய உழைப்பின் பலனை உடலில் வலு இல்லாத தன் இறுதிக் காலத்தில், தன் வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி குறைந்தபட்ச கௌரவத்துடன் அமைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டமே (Social Security Scheme) ஓய்வூதியம். 1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்தியாவில் ஓய்வூதிய நடைமுறை குறித்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், “ஓய்வூதியம் என்பது அரசின் கருணைத்தொகையோ, நன்கொடையோ அல்ல. ஓர் அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் பணியாற்றியமைக்காக அவர் பெறும் உரிமைத் தொகையாகும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பின்னர் அவர் அமைதியாகவும், கௌரவமாகவும் வாழ்வதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் வருமா? ஓய்வூதியம் கொடுப்பதால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நொடிந்து போய் நட்டத்தில் சென்று விடும் என்று பரப்பப்படும் செய்திகளில் துளி உண்மையும் இல்லை. அந்த நிறுவனத்தின் லாபக் குவிப்பில் ஒரு சிறிய அளவு குறையும்; அவ்வளவே. மற்றபடி அது நட்டத்தில் போவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாமே ஒழிய, ஓய்வூதியம் கொடுக்கப்படுவதே காரணம் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் ஏற்படுகிறது என்ற கருத்தும் அதிகமாக முன்வைக்கப்படுகிறது. அரசிற்கு வருவாயை ஈட்டக்கூடிய லாபம் கொழிக்கும் கேந்திரமான துறைகளை ஒவ்வொன்றாக தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, அரசிடம் பணம் இல்லை என்று சொல்வது எவ்வாறு சரியாக இருக்கும்? மாறாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வருவாய் ஈட்டும் துறைகள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் மிகச்சில தனி நபர்களிடம் குவிந்துள்ள செல்வம் அரசின் கஜனாவிற்கு வந்து சேரும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, அமைப்பு சாரா பணிகளில் இருக்கும் வயது மூத்தோர்களுக்கும் கூட ஓய்வூதியம் வழங்க இயலும். புதிய ஓய்வூதிய திட்டமா? பழைய ஓய்வூதிய திட்டமா? ஒரு தொழிலாளி ஓய்வு பெற்ற காலம் முதல் தான் இறக்கும் காலம் வரை மாதம்தோறும் முறைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட தொகையைப் (Defined pension) பெறுவதற்கு வழிவகுப்பது பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே. மாறாக தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி ஒரு தொழிலாளி பணியில் இருக்கும் காலம் முழுவதும் சேகரிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. எக்காலத்திலும் நிலையான மதிப்பைக் கொண்டிருக்காத, மதிப்பிழக்கும் ஆபத்தை அதிகம் கொண்ட பங்குச்சந்தையினால் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்த பணம் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்துடன், எந்த வகையிலும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத மிகக் குறைந்த அளவிலான மாதாந்திர தொகையை ஓய்வூதியம் என்ற பெயரில் வாங்க வேண்டிய அவல நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். பாதுகாப்புத்துறை ஊழியர்கள் (Defense Employees) இத்தகைய நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்ற காரணத்தினால் தான் அரசு அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்கிறது....
தேசிய வாதத்திற்கும் கூட ஒரு எல்லை உண்டு என்பதைத்தான் இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் ராஜினாமா உணர்த்துகிறது . கடந்த...
நமது மண்வாசம் இன்றைய ஒரு பொழுது ஒரு பதிவு பகுதியில் கடந்த நமது மண்வாசம் இதழில் 21ஆம் நூற்றாண்டுக்கான...
*“ஊடக அறம்”* *நாள்: 10-05-2022, (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணி* கருத்துரையாளர் *திரு சூ. அண்ணாமலை,* (முன்னாள் செய்தி...
அறிவியல் புத்தகம் பற்றி ஆயிஷா நடராசன் பேராசிரியர் ராஜுவின் எட்டாவது அறிவியல் நூல் இது. தலைப்பே...
*மூதாதையர்கள் சிந்திய**ரத்தம் முழுவதையும்**முதலில் அளந்தவன் அவனே !**உற்பத்திப் பொருட்களின்**ஓரத்தில் படிந்த**ரத்தத்தை பார்த்த**முதல் மனிதன் அவனே !**அவன்**மின்சாரத்தைப்**புத்தகங்களில்* *அடைத்து**மனிதனிடம்* *கொடுத்தான்**பிடித்தவர்கள்* *தலைகளில்**பல்புகள் எரிந்தன ..**பனித்துளிகளை* *எல்லாம்**சேகரித்து**பாலருவியாய்* *ஓடவிடும்**பொறுமை* *அவனுக்கிருந்தது…**அவனுக்கு**விரக்தி வந்திருந்தால்**விரக்திக்கு மருந்து**கிடைத்திருக்காது ….**பழைய சமூக அமைப்பிற்கு**சவப்பெட்டி ஒன்றை**தன் கையாலேயே**செய்து முடித்த* *பின்தான்**மானுடம் அவனது* *சவப்பெட்டியில்**மங்காத* *ஒளிவிளக்கை**ஏற்றிவைத்தது ..**அவனுக்கு**இரண்டு பெயர்கள்**ஓன்று மார்க்ஸ்**மற்றொன்று உண்மை !!* – *கவிஞர் கந்தர்வன்*
சினிமாத்தனமே இல்லாத அனுபவமாகஒரு போலீஸ் சினிமா…சோழ. நாகராஜன்எளிய மக்களின் மனங்களில் நீண்ட நெடுங்காலமாகப் பதிந்துவிட்ட போலீஸ் எனும் பெரும்...
ஆசிரியர்: சேது ஆனந்தன்செல்: 94420 22301 விலை: ரூ.175/-தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் திரு....
சி.அ.முருகன், திருவண்ணாமலை1)ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்து பற்றி…?அட்டைப்படக் கட்டுரையில் மதுக்கூர் இராமலிங்கம்...
மு.முருகேஷ்அகநி வெளியீடு. (தொடர்புக்கு : 98426 37637 / 94443 60421 ) விலை : ரூ. 120‘இந்து...
எஸ்.வி. வேணுகோபாலன்அன்பர்கள் சிலர் அடுத்தவர்களிடம் நிறைய கேட்டுக் கொண்டிருப்பார்கள். துருவித் துருவிக் கூடக் கேட்பார்கள். ஆனால் தாங்கள் எதுவும்...
கணினித் துறையில் முதன்முதலாக நுழைந்தவர்களில் தலையானவர் அசீம் பிரேம்ஜி அவர்கள். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் அவரே, அப்பல்கலைக்கழகம்...
டாக்டர் ஜி. ராமானுஜம்புகழ் பெற்ற சர்தார்ஜி ஜோக் ஒன்று உண்டு. ஒரு சர்தார்ஜி தினமும் இறைவனிடம் ‘எனக்கு லாட்டரியில்...
ஆசிரியர் : பேராசிரியர் ச. மாடசாமிஎங்கள் தோழரின் அடுத்த நூல் தயாராகி விட்டது. ச. மாடசாமி தோழரின் முகநூல்...
ம. மணிமாறன்எல்லாம் சரியாகத்தான் போகிறது. பழுதில்லை.. முன்ன பின்ன இல்லாமலா இருக்கும்? .. அப்படியே இருந்தாலும் சரியாகிவிடும்.. என்ன...
கடலூர் சுகுமாரன்சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (ருடேயறகரட ஹஉவiஎவைநைள ஞசநஎநவேiடிn ஹஉவ-ருஹஞஹ) என்றதொரு...
லோ. விக்னேஷ்கால்களால் பூமியை மிதித்துப் பிளக்க வேண்டுமென்று துடிப்பவள் போல் தரையை ஓங்கி அடித்து வேகமாக நடந்து கொண்டிருந்தாள்...
தேனி சுந்தர்இரண்டாண்டுகளுக்கு முன்பு தேனியில் ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது.. எங்கள் பள்ளி மாணவர்களுடன்...
உமாமத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையின் கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்து சுமார் 3 வருடங்கள் ஆகிவிட்டன....
மதுக்கூர் இராமலிங்கம்உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.இது நாடாளுமன்ற...
கே. பாலபாரதி1995-களில் கேரளாவின் அரசுப் பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணியிழந்தார்கள்.காரணம், எந்தக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிகளில்...
சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக தென்சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்...
மனிதன் அறிவியல் வளர்ச்சி.. முன்னேற்றம் என்ற பெயரில் எத்தனையோ வேண்டாதவற்றைச் செய்கிறான். அவற்றில் ஒன்று.. மிதமிஞ்சிய பிளாஸ்டிக் பயன்பாடு.பிளாஸ்டிக்...
சிதம்பரம் இரவிச்சந்திரன்பீஜிங். 2022 பிப்ரவரி 4 முதல் 20 வரை சீனாவின் தலைநகரான பீஜிங் நகரில் நடைபெற்ற குளிர்கால...
ஆளுநர் மாளிகையின் பரப்பளவு ஏறத்தாழ 160 ஏக்கர்.ஆளுநருக்குப் பணிவிடை செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 600 பேர்.ஆளுநருக்கான சம்பளம்...
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சன்னி வர்மாவுக்கு கடந்த மாதம் அளித்த பேட்டி இன்றும் பொருத்தமாகவே உள்ளது.கடந்த...
ஜனநாயகத்தின் வெற்றி சிறுபான்மைச் சமூகத்தின் பாதுகாப்பில் உள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மைச்...
“இது எங்கள் இந்தியா” என்ற யூடியூப் சானலில் தலைவர்கள் குரலில் பேசி உங்களை கடுப்பேத்த வருகிறார்கள் நமது அசத்தல்...
கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா # What is evaporation? .. என்பது கேள்வி. எவாபரேஷன் கடினமான வார்த்தை. அதோட ஸ்பெல்லிங்க சரியா...
கடந்த 8 வருடங்களாக பாஜக அரசு செயல்பட்டு வரும் விதம் பற்றி தன் விமர்சனத்தை முன்வைக்கிறார் திரைக் கலைஞர்...